சனி, 2 பிப்ரவரி, 2013

கும்கி வெற்றியும் தோல்வியும்



இயக்குனர் பிரபு சாலமன் தமிழ் சினிமா மரபுகளை ஒதுக்கிவிட்டு நமக்கு பறீட்சியம் இல்லாத களத்தில் வழக்கமான வில்லனும் கதாநாயகனும் சண்டை போடும் காட்சிகளோ எந்த வித லாஜிக்கும் இல்லாத காட்சிகளோ இல்லாமல் கும்கி படத்தை உருவாக்கியிருக்கிரார்.
மலை வாசிகள், அவர்களது வாழ்வியல் யதார்த்தங்கள், ஏன் யானைகள் போன்ற அனைத்து விதமான கதையம்சங்களிலும் அவர் செய்திருக்கும் ஆய்வின் சிறப்பை காணமுடிகிரது! காங்கிறீட் வனாந்தரங்களுக்கு அப்பால் பச்சை பசேலாகத் தெரியும் கதைக்களம் மனதுக்கு இதமாக இருக்கிரது இயற்கையையும் கிராமததையும் இப்படியும் காட்டலாம் என்பதை சொல்கிரது ஒளிப்பதிவு, டி இமானின் இசை ஆஹா ஒஹோ என்னும் அளவுக்கு இல்லை என்றாளும் கதையின் ஒட்டத்தோடு ஒன்றுகிரது.
சிவாஜி குடும்பத்தின் வாரிசு படமாக கும்கியை பார்க்க போனால் எமக்கு கிடைப்பது ஏமாற்றம் தான்! நாயகன் விக்ரம் பிரபு படம் முலுதும் எந்தவித முகபாவமும் இல்லாமல் இருப்பது ஒரு இயக்குனராய் பிரபு சாலமனை தோற்கச்செய்திருக்கிறது இதே பாத்திரத்தில் அவரது முதல் பட நாயகன் விதார்த் நடித்திருந்தால் படத்தின் தரமே வேறாக இருந்திருக்கும் சிவாஜி பிரபு குடும்பத்தின் வாரிசு என்ற பெரும் சுமையை தலைமேல் வைக்கப்பட்டிருக்கும் விக்ரம் பிரபு நிறையவே பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிரது
கதாநாயகனிடம் எதை எல்லாம் கோட்டை விட்டாரோ இயக்குனர் அதையெல்லாம் ஒரு படி மேலாகவே பெற்றுக் கொண்டிருக்கிரார் தம்பி ராமையாவிடம் படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அசத்தியிருக்கிரார் மனிதர் படத்தின் ஒவ்வரு காட்சியும் தொய்வி;ன்றி நகர்வதற்கான காரணம் தம்பி ராமையாவின் கதாபாத்திரமே! நமது இயக்குனர்கள் அவரை சரியாக பயன்படுத்தினாள் தமிழ் சினிமாவின் றாபின் வில்லியம்ஸ் அவர்தான்
மொத்தத்தில் கதையிலும் களத் தெரிவிலும் வென்ற இயக்குனர் பிரபு சாலமன் நாயகனை இயக்குவதில் தோற்றிருக்கிரார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக