ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

முகமது அலியும் கமல் ஹாசனும் ஐ வேவேயும் !!!




1967ம் ஆண்டு அதிபார பிரிவு குத்து சண்டை போட்டிகளில் உலக சம்பியன் ஆன முகமது அலி அவர் பிறந்த நாடான அமேரிக்க சட்டததின்படி கட்டாய இறாணுவ சேவையில் ஈடுபட அழைக்கப்ப்டார்.
 தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக உலக சம்பியன் பட்டத்தை வென்றிருந்த அலி அன்றய திகதியில் உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரனாக இருந்தார் அமேரிக்க கறுப்பர் இனத்வரான அலியின் இயற் பெயர் கசியஸ் கிளே !
அக்காலத்தில் கறுப்பினத்தவரது விடுதலை போராட்டத்தின் ஒரு முகமாக "ஹிலாஜி முகமது" " மல்கம் X" போன்றவர்களது தலைமையில் இயங்கிய அமேரிக்க கறுப்பு முஸ்லீம்கள் அமைப்பில் இணைந்து இஸ்லாமிய மதத்தை தளுவினார் "மாட்டின் லூத்தர்கிங்" தலைமையில் நடந்து வந்த கிறிஸ்த்துவ கறுப்பர்களுடன் ஒப்பிடுகையில் "மல்கம் X"  "முகமது அலி" போன்றவர்கள் மிகவும் வேகம் உள்ளவர்களாகவும் அதிகம் கவணிக்கப் படுபவர்ளாகவும் இருந்தனர் ஆட்சியில் இருந்த அரசுக்கும் வெள்ளையருக்கும் அவர்களது பேச்சுக்கள், நடவடிக்கைகள், மூலம் மிகக்கடுமையான அழுத்தத்தை கொடுத்துவந்தனர்! "அமேரிக்க மத்திய உளவு எஜன்சி" உற்பட அனைத்து வகையான அரச இயந்திரங்களும் இவர்களை அடக்க அல்லது முடிவாக அகற்றிவிட முடக்கி விடப்பட்டிருந்தன
இதே காலத்தில் அமெரிக்கா வியட்நாமில் ஹோ சி மிங் தலைமையிலான வியட்கொம்களுக்கு எதிரான முலுமையான போரில் ஈடுபட்டிருந்தது, அப்போது தான் உள்நாட்டில் தமக்கிருந்த ஒரு தலைவலியை நீக்க போரை பயன்படுத்திவிட தீர்மானித்தனர்!


முகமது அலியை தனது நாட்டுக்காக போராட வருமாறு அழைக்கபட்டது அப்போது தனது இருபதுகளில் இருந்த உலகசம்பியனான அலிக்கு இழப்பதற்கு நிறையவே இருந்தது அனைவரதும் கவணம் அவர்மீது திரும்பியிருந்த நேரம் அலி இறாணுவ சேவையில் இணையப்போவதில்லை என்ற கதை பரவியிருந்த நிலையில் ஆட் சேர்ப்புக்காக அழைக்கப்பட்ட தினத்தில் டெக்ஸ்டாஸ் ஹஸ்டன் நகர தபாலக கட்டத்திற்கு வந்த ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் உள்லே சென்ற அவர் மூடிய கதவுகளுக்கு பின்னால் தனது பதிலை தெரிவித்து விட்டு வெளியே வரும் போது ஊடகவியலாலர்கள் கேள்வி எழுப்பினர் பிறந்த நாட்டுக்காக போருக்கு போக ஏன் மறுக்கிறீகள்? " நான் சாக வேண்டுமானால் இங்கு சாவேன் போராட வேண்டுமானால் இங்கு போராடுவேன் என் எதிரிகள் நீங்கள் வெள்ளையர்கள் எங்கோ ஒரு நாட்டில் இருக்கும் வியட்நாமியனோ சீனாக்காரனோ அல்லது தோல் நிறம் வெள்ளையில்லாத மனிதர்களை கொலை செயவதற்கு போக மறுக்கிறேன் எங்கோ ஒரு நாட்டில் உள்ள ஏழை மக்களை வசதியுடைய பலம்வாய்ந்த அமேரிக்காவுக்காக கொலை செய்ய நான் போகப்போவதில்லை அவர்கள் என் மூதாதையரை அடிமை படுத்தவோ மிருகம்போல் நடத்தவோ இல்லை அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்யப் போக மறுக்கிறேன் அதற்காக என்னை சிறையிலிடுவதானால் இடட்டும்!"

 அலியின் இந்த முடிவை அடுத்து அவர் வென்ற உலக சம்பியன் பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அவரது குத்து சன்டை போட்டிகளுக்கான அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டது அலி கைது செய்யப்பட்டார் குத்து சண்டை வலயத்தினுல் எவராளும் விழுத்த முடியாதிருந்த அந்த வீரனை! அவரது விளையாட்டுத்திறனின் உச்ச கட்டத்தில் இருந்த போது அரசியல் சூழ்ச்சிகளால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு களத்தைவிட்டு அகற்றினர் . இந்த நிலையில் அலி சொன்னார் நான் இழப்பவை அதிகம்தான்! ஆனால் என் முடிவு இறுதியானது அதன் நியாயங்களை வரலாறு சொல்லும்!!!
ஐ வேவே 2008 ம் ஆண்டு மாவோகண்ட மக்கள் சீனா நடத்திய ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்ற அரங்கத்தை நிர்மானிப்பதில் பெரும் பங்கு வகித்தவர் கட்டிடக் கலைஞ்ஞர் மெய்யியலாலர் சமூக ஆர்வலர் இப்படி பல பெயர்களை சொல்லிக்கொண்டே போகலாம் அல்லது ஓரே வார்த்தையில் கலைஞ்ஞன் என்றும் சொல்லலாம்,


தற்கால சீனாவைப்பற்றி சொல்வதானால் அமேரிக்கா உலகிற்கு நடந்து விட்ட சாபம் என்றாள் சீனாவோ நடக்கவிருக்கும் பயங்கரம்! மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகார முறை ஒன்றின் கீழ் மனிதத்துவம் சமுதாய பொறுப்புகள் எதையுமே கணக்கில் எடுக்காமல் நவீன உலகின் முதலாம் இலக்க முதலாலியாய் வருவதற்காக அரக்கத்தனமாக இயங்கி கொண்டிருக்கும் இயந்திரம் அந்த அமைப்பிற்குள் ஒரு அணும் பெண்னும் கலவிகொணடு பிள்ளை பெறுவது முதல் ஒரு கலைப்படைப்பை வெளியிடுவது வரை ஆண்டு கொணடிருக்கும் கமியுனிஸ்ட் கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் செய்யப்பட வேணடும்!
சீனாவின் சிங்சாங் பிராந்தியத்தில் இடம் பெற்ற நில நடுக்கத்தின் பின்னரான சீன அரசின் ஊலல்கள் மூடி மறைப்புக்கள் முக்கியமாக "சிங்சாங்கின் டுபூ ஸஹின்" பாடசாலை அழிந்த விவகாரம் போன்ற சீன அரசு உலகத்திடமிருந்து மறைக்கும் விடயங்களை வெளிகொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவு சிறையில் அடைக்கப்பட்டார் அவருக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டு வரி ஏய்ப்பு சில காலம் சிறையில் இருந்த ஐ வேவே பின்னர் ஏற்பட்ட சர்வதேச எதிர்ப்புகளை தவிர்க்கும் வகையில் விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் ஆனால் சீன அரசாங்கத்தினது எந்த விதமான அழுத்தங்களுக்கு முன்னாளும் அவரது கலைப்படைப்புகள் சிரம் தாழ்த்தவில்லை!

கமல் ஹசன் தமிழ் சினிமாவின் உலக நாயகன்! தமிழ் சினிமாவிற்குள் நவீன தொலில்நுற்பத்தை கொண்டுவந்ததில் பெரும் பங்களிப்பு செய்தவர், சிறுவர்களாய் இருந்த நாம் இளைஞ்ஞர்களானபோது எமக்குள் இருந்த சமுதாய கோபத்தை அர்த்தப்படுத்தியது அவர் நடித்த சத்தியா, அந்த வேகம் தணிந்து ஆனாள் ஏக்கம் தீராமல் இருந்த போது பல யதார்த்தங்களை சொன்னது கமல் நடித்த அன்பே சிவம்!

கமலது விஸ்வரூபம் தொடர்பில் நிறையவே பேசியாகிவிட்டது அந்த திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு காரணம் அரசியல் என்பது தெளிவு, அது ஜெயலலிதாவினுடையதா? அல்லது தனியே மதவாத அமைப்புகளினது அரசியலா? அல்லது வேறு ஏதாவது ஒரு தரப்பா ?என்பதை வரலாறு எமக்கு சொல்லும்

ஆனால் அதுவல்ல இப்போது எமக்கிருக்கும் வருத்தம் சமரசம் என்ற பெயரில் கமல் தமிழ் சினிமாவின் சவப்பெட்டியின் முதல் ஆணியை அடித்திருக்கிறார் என்பதுதான் !!!
ஒரு தணிக்கை குழு வைக்கப்பட்டு அதில் உள்ளவர்கள் குறிப்பிட்ட திரைப்படம் திரையிடப்பட தகுதியானது தான் என சான்றிதல் அளித்ததன் பின்னர், ஊருக்குள் இருக்கும் அனைத்து விதமான (சங்கங்கள்) (அரசியல் கட்சிகள்) (சாதியஅமைப்புகள்) என "ஆட்டொ காரர் சங்கம்முதல் தலிபான் தீவிரவாதிகள்வரை" அனைவரதும் ஆசிர்வாதத்துடன் தான் இனி வரும் ஒவ்வரு திரைப்படமும் வெளியிடப்பட வேணடியிருக்கும்! திரைப்படத்தின் பெயரில் ஆரம்பித்து ஒவ்வரு காட்சி, கதை வசனம் முதல் நாயகியின் இடை, தொடை வரை ஒவ்வொன்றுக்கும் எதிராக வழக்கு தொடரவும் அரசிடம் மனு கொடுக்கவும் போதுமானளவு "ஜந்துக்களும்" அவற்றை நியாயப்படுத்த சோ போன்ற அதி புத்திசாலிகளும் இருக்கின்றனர் ஆகவே இனி தமிழ் சினிமா எடுக்கப்போகும் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது என்ன வென்றாள் ((ஸாரி சார் ஆப்பு ஏற்கனவே வைக்கப்பட்டு விட்டது போய் அமர்வது உங்கள் விருப்பம்))
முகமது அலிக்கும் ஐ வேவேயுக்கும் இருந்த முதுகெலும்பு உலகநாயகனுக்கு இல்லாமல் போனது தமிழர்களது துர்பாக்கியமே!


பிற்குறிப்பு (கலைஞ்ஞர்கள் சமரசம் செய்து கொள்வதில்லை கம்பனும் பாரதியும் கன்னதாசனும் சமரசம் செய்து கொண்டிருந்தாள் எமது இலக்கியங்கள் அன்றே இறந்திருக்கும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக