திங்கள், 4 பிப்ரவரி, 2013

சமர்


நுதன உலகின் தொழில்நுற்ப மாற்றங்களின் ஒர் அம்சமாக தற்கலத்தில் கெமரா கண்கானிப்பு என்பது மேற்கு உலக நாட்டவரது இயல்பு வாழ்க்கையில் ஒரு பகுதியாகவிட்டது 9-11 தாக்குதலுக்கு பின் நியுயார்க் லன்டன் பாரிஸ் போன்ற நகரங்கள் 24 மணி நேர கெமரா கண்கானிப்பின் கீழ் இருப்பதை தமது தனிநபர் உரிமைகள் மீதான வரம்பு மீறலாக பலரும் கருதினாலும் 2001 ம் ஆண்டு லண்டனில் அல் கொய்தா தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையை முறியடித்ததில் இந்த கெமரா கண்கானிப்பிற்கு முக்கிய பங்கிருந்தது
சமகால சமூக கலாச்சார அரசியல் மாற்றங்களை உடனடியாகவே தமது படைப்புகளுக்குள் கொண்டு வந்து விடும் மேற்கத்தைய சினிமாக்காரர்கள் இந்த கெமரா கண்கானிப்பினை மையப்படுத்தி பல திரைப்படங்களை உருவாக்கினர் இவற்றில் முக்கியமாக டென்சில் வாசிங்டன் நடித்த டெஜாவு ஜிம் கெரி நடித்த ட்ரூமன் ஷோ போன்ற திரைப்படங்களை குறிப்பிடலாம் அத்தோடு இந்த 24 மணி நேர கண்கானிப்பு என்பதை அடிப்படையாக கொண்டு தொலைக்காட்சிகள் றியாலிட்டி சோக்களையும் தயாரிக்க ஆரம்பித்தனர் முக்கியமாக சீபிஎஸ் தொலைக் காட்சியின் பிக்பிறதர் செவைய்வர் மற்றும் அமேய்சிங் ரேஸ் போன்ற றியாலிட்டி சோக்கள் இந்த 24 மணி நேர கணகானிப்பை அடிப்படையாக கொண்டு விருத்தி செய்யப்ப்டுள்ள போட்டி நிகள்ச்சிகலாகும் இவை கண்கானிப்பின் அடுத்தகட்டமாக தமக்கு தேவையான நாடகத்தன்மையை உருவாக்க இயல்பான நிலையில் உள்ள தமது களத்தை இயல்பற்றதாக மற்றி நிகழ்ச்சியில் பங்களிப்பவர்களை மனோவியல் றீதியாகவும் பௌதீக றிதியாகவும் தொடர்ந்து அழுத்தத்துக்கு உள்ளாக்குவதன் மூலம் அவர்கள் தமது இயல்பு நிலையை இழந்து வரம்பு மீறி போகசெய்வது போட்டியின் வெற்றிக்காக அனைத்து விதமான மணித விழுமியங்களையும் இழக்க செய்வது போன்ற உத்திகளின் மூலம் தொலைக்காட்சிப் பார்வையாளர்களது உள்ளுக்குள் இருக்கும் அந்த பரிணாம வளர்ச்சியடையாத குகை மனிதனை மகிழ்விப்பதுதான் இப்படியான நிகழ்ச்சிகளது நோக்கம் அது வியாபார றீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன
இந்த 24 மணி நேர கண்கானிப்பு தொலைகாட்சி றியாலிட்டி சோக்கள் ஆகிய இரண்டையும் மையப்படுத்தி எதிர்கால உலகை களமாக கொண்டு எழுதப்பட்டுள்ள ஜப்பானிய கதையான ஹங்கர் கேம்ஸை மையப்படுத்தி கடந்த வருடம் ஹங்கர் கேம்ஸ் என்ற திரைப்படம் உருவானது மிக குரைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பாராவிதமாக பெரும் வெற்றி பெற்றது

 

இந்த ஹங்கர் கேம்ஸ் திரைப்படத்தை பாத்துவிட்டு விஷால் திரிஷா நடிக்க சமர் என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர் தொழில்நுட்பறீதியாக எந்தவித ஆய்வும் செய்யப்படாமல் ஏன் என்று விளங்காத காட்சிகள் தொடர் ஒன்றை வெறும் விஷாலினது அக்ஷன் மற்றும் திரிஷாவின் கிளமர் ஆகியவற்றை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட திரைப்படம். தகவல் தொழில்நுற்பம் வழர்ச்சியடைந்துள்ள இந்தக்காளத்தில் பார்வையாலர்களை இவ்வளவு குறைத்து மதிப்பிடுவது இயக்குனரது தவறே கதை தெரிவு திரைப்பட ரசிகர்களது அறிவுக்கூர்மையை புரிந்து கொள்ளாதது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்வதானது விஷாலை வெகுவிரைவில் மற்ற மொரு சிபிராஜ் அருன் விஜய் போன்ற காளாவதியான வாரிசு நடிகராக்கிவிடும் ஆகவே விஷல் உசார் ப்லீஸ் இப்படியான திரைப்படங்கள் எடுக்க திட்டமிடுபவர்கள் கொஞ்சம் ஆய்வு செய்யவும் ஹங்கர் கேம்சின் வெற்றிக்கான காரணம் புத்தகமாக வெளிவந்த இந்தக்கதை டீனேஜ்கள் மத்தியில் வெகு பிரபலம் அடைந்திருந்தது அதுவே திரைப்படம் வெளிவந்ததும் எதிர் பாராத வெற்றியை கொடுத்தது இது போன்ற கதை ஒன்றை நமது சமுகத்துக்காக எடுக்கும் போது நம்பகத்தன்மையை உருவாக்க செய்ய வேண்டிய லாஜிக்குள்ள திரைக்கதையை உருவாக்கவும். நாயகன் ஏன் தொடாந்து பேங்கொக்கை விட்டு இந்தியா போகாமல் இருக்கிரார் என்பதில் தொடங்கி அடுத்தடுத்து நடக்கும் ஒவ்வொரு திருப்பத்தின் போதும் திரிஷாவிடம் ஒடிப்போவதைத்தவிர கொஞ்சமும் பொது அறிவை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற காடசிகள் தொடர்ச்சியாக வருவது ரசிகர்களை கேலி செய்வதாக இருக்கிரது மொத்தத்தில் சமர் உப்பிலாத சாம்பார்             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக