திங்கள், 19 ஆகஸ்ட், 2013

தலைவாவும் - கொங்கோ நாட்டு கொரில்லாக்களும்

கோங்கோ நாட்டின் காடுகளுக்குள் வசிக்கும் கொறில்லாக்கள் பற்றிய விவரனத்தை பார்த்துக் கொண்டிருந்த போது குழுக்களாக வாழும் அந்த விலங்குகள் எவ்வாறு தமது தலைவனை தெரிவு செய்கின்றன என்றும் தலைமைத்துவம் வகிக்கும் அந்த குரங்கு எவ்வாறு தனது குழுவின் இருப்பையும் அதன் வளர்ச்சியையும் மையப்படுத்தி செயற்படுக்கின்றது என்பதையும் அதே போல் வேறு ஏதேனும் விலங்குகலாள் அல்லது மனிதர்களாள் தனது குழுவுக்கு அச்சுருத்தல் ஏற்படும் போது குழுவினது அங்கத்தவர்களை பாதுகாக்க தானே உயிரை பணயம் வைக்கின்றனவே தவிர தனது குழுவினது கீழ்மட்ட உருப்பினர்களை ஆபத்தை நோக்கி அனுப்பிவிட்டடு தலைமை பதுங்குவதில்லை


 காடு தொடர்பான அறிவு அனுபவம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தலைமையின் முதிர்ச்சி தீர்மாணிக்கப்பட்டாளும் தலைமையின் இருப்பு குழுவின் பெண் உருப்பினர்களிடமே உள்ளதையும் அதே போல் குழுவுக்குள் புதிதாக தலைமையை அடைய விரும்பும் ஏனைய கொரில்லாக்கள் எவ்வாறு முயல்கின்றன என்றும் ஒரு கட்டத்தில் தலைமையை அடைய விரும்பும் குரங்கிற்கும் தலைவனாக இருக்கும் குரங்கிற்கும் இடையிலான நேரடியான சண்டையின் மூலம் ஒன்று கொல்லப்பட மற்றயது தலைமைத்துவத்தை கைப்பற்றும் ஒரு வேளை தலைவனாக இருக்கும் கொரில்லா கொலை செய்யப்பட்டாள் புதிதாக தலைமைக்குவரும் கொரில்லா அந்த குழுவில் உள்ள அனைத்து குட்டிகளையும் கொன்றுவிடும் காரணம் குழுவில் உள்ள அனைத்து குட்டிகளும் தலைவனாக இருந்த கொரில்லாவின் குட்டிகளாகஇருக்கும்


இவை வனவிலங்கினம் ஒன்றின் வாழ்கை முறையினை நீண்டகாளமாக ஆய்வு செய்து தொகுக்கப்பட்ட தகவல்கள்

ஆரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி ஒரு சமூகப்பிராணியான மனிதன் சமூகமாக வாழமுற்படும் போது அரசியல் தோற்றம் பெறுகிரது புராதன கிரேக்கர்களாள் வரைவிலக்கனப்படுத்தப்பட்ட அந்த அரசியல் பல நுற்றாண்டுகiளைக் கடந்து மனிதன் என்னும் விலங்கினது இருப்பை தீர்மாணிக்கும் மாபெரும் சக்தியாக வளர்ந்து நிற்கிரது நூதன சிவில் சமூகத்தின் ஒவn;வாரு செங்கலும் அரசியல் என்ற சீமேந்தாலேயே இணைக்கப்பட்டுள்ளது
கல் யுகத்தில் ஆரம்பித்து பல்வேறு பரிணாமங்களை கடந்து தகவல் யுகத்தில் உலகமே ஒரு கணனிக்குள் சுருங்கிவிட்ட நிலையில் மனித இனம் எனைய விலங்குகளை விட தம்மை வேறுபடுத்திக் கொண்டுவிட்டபோதும் இன்னும் எமக்குள் அந்த கல்யுகத்துக்கு முந்தைய காட்டுத்தனங்கள் எஞ்சியிருக்கின்றன என்பதற்கு மிகச்சிறந்த அண்மைய உதாரணம் தலைவா திரைப்படத்தின் மீதான தடை

ஆமாம் யாரும் தடைவிதிக்க வில்லையே என்று உங்களில் சிலர் சொல்வது புரிகிரது இல்லை உண்மை என்ன வென்றாள் அரசியல் வாதியான ஜெயலலிதா இந்த திரைப்படத்தை தடுக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்கிரார்

முதலில் தலைவா என்பது எந்த வித சினிமா பெறுமதிகளும் இல்லாத மிகமிக கேனைத்தனமாக எடுக்கப்பட்ட அர்த்த சூனியமான ஒரு தரம் இல்லாத மற்றும் ஒரு இந்திய திரைப்படம் எஸ் ஏ சந்திரசேகர் போன்றவர்கள் தாம் ஒரு பெரிய அரசியல் புரட்சிப்படம் எடுத்துவிட்தாக நினைத்துக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை
அது அப்படியிருக்க இந்தியா என்னும் ஜனநாயக நாட்டில் எந்தவித அர்த்தமும் இல்லாத தலைவா திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதானது கொங்கோ வனாந்தர கொரில்லாக்கள் தமது இன குட்டிகளை கொலை செய்வதை ஒத்தது தமது அதிகாரத்துக்கு சவாலாக வரக்கூடும் என்ற அச்சத்தில் எதுவும் செய்யமுடியாத அந்தக்குட்டிகளை கொலை செய்யும் கொரில்லாவும் சரியாக இரண்டு காட்சிகள் தொகுக்கப்படாத தலைவாத்திரைப்படத்தை தடுத்து நிறுத்தும் ஜெயலலிதாவும் உருவத்தில் மட்டுமே வேறுபடுகின்றனர் இருதரப்பினதும் நடவடிக்கைகளும் தமது பரிணாம படிநிலைகளை வெளிப்படுத்துகின்றன 


நடிகiயாக இருந்து அரசியலுக்கு வர ஜெயலலிதாவுக்கு என்ன ஜனநாயக உரிமை இருக்கிரதோ அதே ஜனநாயக உரிமை மற்றய அனைத்து குடிமக்களுக்கும் உள்ளது என்பதை அவர் மறந்திருப்பது மட்டுமல்ல மற்றவர்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளை சூழ்ச்சிகரமாக தடுப்பதானது பலநூற்றாண்டுகளாக மனித இனம் அடைந்த வளர்ச்சியைகடந்து மீண்டும் மிருகமாவதை ஒத்தது

சனி, 3 ஆகஸ்ட், 2013

Why this கொலை வெறி விஜய் டிவி?


கருனாநிதி உயிருடன் இருக்க வாலி என்ற கவி மரணித்தது சிரியாவில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமானது அமேரிக்கா மக்களை ஒட்டுக் கேட்பதை வெளியே சொன்ன எட்வட் ஸ்னொட்டன் சீனாவிடமும் ரஸ்யாவிடமும் தஞ்சமடைந்தது பொதுபளசேனா இலங்கையில் முஸ்லீம்களை இனவெரி கொண்டு ஒடுக்க  அன்றய தமிழ் அரசியல் தலைவர்கள் என்ன முட்டாள் தனங்களை செய்தார்களோ அதையே ஹகீமும் அதாவுள்ளாவும் எனைய முஸ்லீம் தலைமைகளும் செய்வது என்று பல்வேறு கொடுமைகளை கொஞ்ச நேரம் மறந்துவிட விஜய் டிவியின் சுப்பர்சிங்கரை பார்க்க உட்கார்ந்தாள் மரத்தால் விழுந்தவனை மாடு முட்டிய கதையாய் இந்த ரம்யா!!!
 ஒய் திஸ் கொலை வெறி விஜய் டிவி?

தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சி தொகுப்பாலர்களை எதை அடிப்படையாக கொண்டு தெரிவு செய்கிரார்கள என்பது புரியவில்லை அது எதுவாக இருந்தாளும் அது சரிவரவில்லை என்பதை ரசிகர்களது பதிவுகளை இணையத்தில் பார்க்கும் போது தெரிகிரது ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்களும் அவற்றின் முடிவெடுப்பவர்களும் எவ்வளவுக்கு தமது ரசிகர்களை பொருற்படுத்துகிறார்கள் என்பதுவே கேள்வி


றோமர் காலத்தில் மன்னரையும் மக்களையும் மகிழ்விக்க நடத்தப்பட்ட கிளடியேட்டர் சண்டைகளின் நூதன படிநிலையாக உருவெடுத்துள்ள அய்டல் தெரிவு நிகள்ச்சி அமைப்பு தொலைக்காட்சி உலகுக்கு பிரித்தானியரான சய்மன் கவுலினால் அறிமுகம் செய்யப்பட்டது பின்னர் அவர் அதனை அமேரிக்காவின் பொக்ஸ் தொலைகாட்சிக்கு எடுத்துவர அதுவே உளகின் ஒவn;வாரு தொலைக்காட்சி நிறுவனத்தினதும் இன்றி அமையாத நிகள்ச்சி அமைப்பானது தமாக சொந்த நிகள்ச்சி அமைப்புகளை உருவாக்காமல் தொடர்ந்து மேற்கத்தைய நிகள்ச்சிகளை காப்பியடிக்கும் எமது தொலைக்காட்சிகளும் உடனடியாக தாமும் இப்படியான நிகள்ச்சிகளை ஆரம்பித்தாளும் விஜய் டிவியின் சுப்பர் சிங்கர் ஏனைய தொலைக்காட்சிகளின் நிகள்ச்சிகளைவிட வெற்றிகரமானதாகியது அதற்கு பல்வேறு காரணங்களை கூறமுடிந்தாளும் மிக முக்கியமானது நிகள்சியை பார்க்கும் சாதாரனமக்களுக்கு நிகள்ச்சியில் பங்களிப்பவர்கள் தம்மை விட உயர்ந்தவர்கள் என்றோ தம்மைவிட அதிகம் தெரிந்தவர்கள் என்றோ இல்லாமல் தமக்குள் இருந்து வருபவர்கள் தம்மை விட்டு வேறுபட்டு நிற்கும் அந்த மேட்டுக்குடிகளுக்கு சாவாள் விடுவதாகவும் அவர்களது ஈகோவிற்கு எதிராக எழுந்து நிற்கும் தமது உணர்வை பிரதிநிதித்துவம் செய்வதாளும் மக்கள்தம்மை அறியாமலே இந்த நிகள்ச்சியை தமது விருப்புக்குரிய தொரு நிகள்ச்சியாக்கி கொண்டுள்ளனர்

ஆனால் விஜய் டிவியோ தமது நிகள்ச்சின் நிஜமான பிரதிநிதித்துவத்தை புரிந்து கொள்ளாமல் அதன் அடிப்படை யதார்த்தத்துக்கு மாறாக ரசிகர்கள் போட்டியாலர்கள் போன்றவர்களை விட தான் உயர்ந்தவர் மாறுபட்டவர் என்பதை உருதி செய்துகொள்வதையே தனது இலக்காக கொண்டுள்ள றம்யாவை நிகள்சி தொகுப்பாலர் ஆக்கியுள்ளனர் றம்யாவின் நிகள்ச்சி தொகுப்பாற்றலை கூர்ந்து பார்த்தாள் புரிபவை
ரம்யாவுக்கு இசையை பற்றி தெரியாது அல்லது தெரிந்ததை சொல்ல தெரியாது
அவருக்கு தனது பார்வையாலர்களுடன் தன்னை தொடர்புபடுத்தி கொள்ளமுடியாதிருக்கிரது 
 தான் என்ன சொல்கிரேன் என்பது அவருக்கே தெரியாது ஏதோ ஒன்றை சொல்ல ஆரம்பித்து வேறு ஏதாவது கூரி முடிக்கிரார்
றம்யாவுக்கு ஒரு தொகுப்பாலருக்கு இருக்க வேண்டிய (கறிஸ்மா)ஆலுமை இல்லை
இவை எல்லாவற்றையும் விட தன்னால் முடியாது என்பது அவருக்கு தெரியாமல் இருக்கிரது
சன் டிவியை பொருத்தவரை றம்யாக்களை உருவாக்குவதே அவர்கள்தான் ஆனால் விஜய் டிவி உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி ஆள மாத்துங்கப்பா