திங்கள், 19 ஆகஸ்ட், 2013

தலைவாவும் - கொங்கோ நாட்டு கொரில்லாக்களும்

கோங்கோ நாட்டின் காடுகளுக்குள் வசிக்கும் கொறில்லாக்கள் பற்றிய விவரனத்தை பார்த்துக் கொண்டிருந்த போது குழுக்களாக வாழும் அந்த விலங்குகள் எவ்வாறு தமது தலைவனை தெரிவு செய்கின்றன என்றும் தலைமைத்துவம் வகிக்கும் அந்த குரங்கு எவ்வாறு தனது குழுவின் இருப்பையும் அதன் வளர்ச்சியையும் மையப்படுத்தி செயற்படுக்கின்றது என்பதையும் அதே போல் வேறு ஏதேனும் விலங்குகலாள் அல்லது மனிதர்களாள் தனது குழுவுக்கு அச்சுருத்தல் ஏற்படும் போது குழுவினது அங்கத்தவர்களை பாதுகாக்க தானே உயிரை பணயம் வைக்கின்றனவே தவிர தனது குழுவினது கீழ்மட்ட உருப்பினர்களை ஆபத்தை நோக்கி அனுப்பிவிட்டடு தலைமை பதுங்குவதில்லை


 காடு தொடர்பான அறிவு அனுபவம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தலைமையின் முதிர்ச்சி தீர்மாணிக்கப்பட்டாளும் தலைமையின் இருப்பு குழுவின் பெண் உருப்பினர்களிடமே உள்ளதையும் அதே போல் குழுவுக்குள் புதிதாக தலைமையை அடைய விரும்பும் ஏனைய கொரில்லாக்கள் எவ்வாறு முயல்கின்றன என்றும் ஒரு கட்டத்தில் தலைமையை அடைய விரும்பும் குரங்கிற்கும் தலைவனாக இருக்கும் குரங்கிற்கும் இடையிலான நேரடியான சண்டையின் மூலம் ஒன்று கொல்லப்பட மற்றயது தலைமைத்துவத்தை கைப்பற்றும் ஒரு வேளை தலைவனாக இருக்கும் கொரில்லா கொலை செய்யப்பட்டாள் புதிதாக தலைமைக்குவரும் கொரில்லா அந்த குழுவில் உள்ள அனைத்து குட்டிகளையும் கொன்றுவிடும் காரணம் குழுவில் உள்ள அனைத்து குட்டிகளும் தலைவனாக இருந்த கொரில்லாவின் குட்டிகளாகஇருக்கும்


இவை வனவிலங்கினம் ஒன்றின் வாழ்கை முறையினை நீண்டகாளமாக ஆய்வு செய்து தொகுக்கப்பட்ட தகவல்கள்

ஆரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி ஒரு சமூகப்பிராணியான மனிதன் சமூகமாக வாழமுற்படும் போது அரசியல் தோற்றம் பெறுகிரது புராதன கிரேக்கர்களாள் வரைவிலக்கனப்படுத்தப்பட்ட அந்த அரசியல் பல நுற்றாண்டுகiளைக் கடந்து மனிதன் என்னும் விலங்கினது இருப்பை தீர்மாணிக்கும் மாபெரும் சக்தியாக வளர்ந்து நிற்கிரது நூதன சிவில் சமூகத்தின் ஒவn;வாரு செங்கலும் அரசியல் என்ற சீமேந்தாலேயே இணைக்கப்பட்டுள்ளது
கல் யுகத்தில் ஆரம்பித்து பல்வேறு பரிணாமங்களை கடந்து தகவல் யுகத்தில் உலகமே ஒரு கணனிக்குள் சுருங்கிவிட்ட நிலையில் மனித இனம் எனைய விலங்குகளை விட தம்மை வேறுபடுத்திக் கொண்டுவிட்டபோதும் இன்னும் எமக்குள் அந்த கல்யுகத்துக்கு முந்தைய காட்டுத்தனங்கள் எஞ்சியிருக்கின்றன என்பதற்கு மிகச்சிறந்த அண்மைய உதாரணம் தலைவா திரைப்படத்தின் மீதான தடை

ஆமாம் யாரும் தடைவிதிக்க வில்லையே என்று உங்களில் சிலர் சொல்வது புரிகிரது இல்லை உண்மை என்ன வென்றாள் அரசியல் வாதியான ஜெயலலிதா இந்த திரைப்படத்தை தடுக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்கிரார்

முதலில் தலைவா என்பது எந்த வித சினிமா பெறுமதிகளும் இல்லாத மிகமிக கேனைத்தனமாக எடுக்கப்பட்ட அர்த்த சூனியமான ஒரு தரம் இல்லாத மற்றும் ஒரு இந்திய திரைப்படம் எஸ் ஏ சந்திரசேகர் போன்றவர்கள் தாம் ஒரு பெரிய அரசியல் புரட்சிப்படம் எடுத்துவிட்தாக நினைத்துக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை
அது அப்படியிருக்க இந்தியா என்னும் ஜனநாயக நாட்டில் எந்தவித அர்த்தமும் இல்லாத தலைவா திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதானது கொங்கோ வனாந்தர கொரில்லாக்கள் தமது இன குட்டிகளை கொலை செய்வதை ஒத்தது தமது அதிகாரத்துக்கு சவாலாக வரக்கூடும் என்ற அச்சத்தில் எதுவும் செய்யமுடியாத அந்தக்குட்டிகளை கொலை செய்யும் கொரில்லாவும் சரியாக இரண்டு காட்சிகள் தொகுக்கப்படாத தலைவாத்திரைப்படத்தை தடுத்து நிறுத்தும் ஜெயலலிதாவும் உருவத்தில் மட்டுமே வேறுபடுகின்றனர் இருதரப்பினதும் நடவடிக்கைகளும் தமது பரிணாம படிநிலைகளை வெளிப்படுத்துகின்றன 


நடிகiயாக இருந்து அரசியலுக்கு வர ஜெயலலிதாவுக்கு என்ன ஜனநாயக உரிமை இருக்கிரதோ அதே ஜனநாயக உரிமை மற்றய அனைத்து குடிமக்களுக்கும் உள்ளது என்பதை அவர் மறந்திருப்பது மட்டுமல்ல மற்றவர்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளை சூழ்ச்சிகரமாக தடுப்பதானது பலநூற்றாண்டுகளாக மனித இனம் அடைந்த வளர்ச்சியைகடந்து மீண்டும் மிருகமாவதை ஒத்தது

1 கருத்து:

  1. அருமையான தகவல்களோடு நல்லதொரு ஒப்புமை பதிவு. தங்கள் எழுத்து நடையும் மிக நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு