வியாழன், 31 ஜனவரி, 2013

விஸ்வரூபமும் டிம்பக்டூவும்

நாம் எல்லாம் விஸ்வரூபத்தின் தடைபற்றி வாதிட்டுக் கொண்டிருக்கும் போது ஆபிரிக்காவின் மாளி நாட்டில் டிம்பக்டூ நகரில் அமைந்திருந்த அஹமத் பாபா நூலகத்திணை  தீயிட்டு எரித்துவிட்டனர் இந்த நூலகத்தில் 13ம் நூறாண்டு மற்றும் 14ம் 16ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ஆபிரிக்க இஸ்லாமிய வாலாற்று ஆவனங்கள் குர்-ஆன்கள் என பல பெறுமதிமிக் 2000 க்கும் அதிகமான அவனங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன இந்த ஆவனங்களின் முக்கியத்துவம் என்னவென்றாள் மேற்கத்தையரது வருகைக்கு முன்னரான ஆபிரிக்க இஸ்லாமியர்கள் பற்றிய வரலாற்று பதிவுகளில் மேற்கத்தைய கிறிஸ்துவ ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தவை போக எஞ்சியிருந்த மிகச்சில ஆவனங்களை அஹமத் பாபா நூலகத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர்
மாளி நாட்டில் அரசுக்கு எதிராக போராடிவரும் இஸ்லாமிய கிளர்ச்சியாலர்கள் கடந்த 10 மாதங்களாகளாக டிம்பக்டூ உட்பட பல மாளிய நகரங்களை ஷரியா சட்டத்தின்கீழ் ஆட்சி செய்துவந்தனர் இந்த வாரம் மாளியின் முன்னாள் ஆட்சியாலாகளான பிரெஞ்சுப்படைகள் மாளிய அரசாங்கத்தின் உதவிக்கு வந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இறானுவ நடவடிக்கைகளை நடத்த தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்களை விட்டு வெளியேறிய கிழர்ச்சியாலர்கள் டிம்பக்டூவை விட்டு வெளியேறும் முன் அவர்களது புனித நூலான திரு குர்-ஆன் மற்றும்  பல நூற்றாண்டு களாக பாதுகாக்கப்பட்டு வந்த  இஸ்லாமியர் வறளாற்றில் முக்கிய பதிவுகளை கொண்ட ஆவனங்களையும் தன்னகத்தே கொண்ட அஹமத் பாபா நூலகத்தினை தீயிட்டு எரித்துள்ளனர்
 
இதற்கிடையே தமிழ் நாட்டில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டு தடை நீக்கப்பட்டு மீண்டும் தடை செய்யப்பட்டு மீண்டும்...! அட போங்கைய்யா போறதுக்கு காட்டுத் தனத்துக்கும் கேனைத்தனத்துக்கும் கோமாளித்தனத்துக்கும் ஒரு அளவில்லையா?
இங்கே ஒரு திரைப்படத்தில் திரு குர்-ஆன் பயங்கரவாதிகளின் கை நூளாக காட்டப்பட்டிருப்பதாக கொதிக்கும் மதவாதிகள் அங்கே முகமது நபி வாழ்ந்து இருநூறு ஆண்டுகளில் எழுதப்பட்ட வறளாற்று நுல்கள் அதே திரு குர்-ஆன் ஆகியவை எரிக்கப்பட்டுள்ளன அதைப்பற்றி ஒரு மூச்சும் விடவில்லை காரணம் எரித்த பயங்கரவாதிகளும் இஸ்லாமிய போராலிகள் என்பதாளா? ஆல்லது இந்தப்பயங்கரவாத அமைப்புகளுக்கு வேண்டிய பணமும் ஆயுதங்களும் கொடுப்பது அரேபியர்கள் என்பதாளா? ஆல்லது ஆபிரிக்க கருப்பர்கள் எதை எரித்தாள் என்ன நமக்கு முக்கியம் நம் அம்மாவின் அரசியல் என்பதாளா?

என்னவோங்க டிம்பக்டூவில் நடந்த கொடுரத்தை நாம் எதிர்க்கிறோம் மத நூல்களை எரித்ததற்காக அல்ல மனித வரளாற்றில் முக்கிய காலகட்டம் ஒன்று தொடர்பாக எமக்கிருந்த பதிவுகளை அழித்தமைக்காக
எம்மை பொருத்தவரை நூலகத்தை எரித்தவர்களுக்கும் இங்கு திரைப்படத்தை எதிர்ப்பவர்களுக்கும் இடையில் அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக