புதன், 30 ஜனவரி, 2013

ஜனநாயகமும் கருத்து சுதந்திரமும்!!!

ஒருவன் நூறு கோடி செலவு செய்து ஒரு திரைப்படம் எடுக்க எங்காவது குருகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாத அமைப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் சில கினற்றுத்தவளைகள் எதிர்ப்புக்காட்ட மக்களின் இயல்பியல் வாழ்க்கையுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத அரசாங்கங்கள் அநத்த திரைப்படத்தை தடை செய்துவிடும் இது இருபத்தியொராம் நூற்றாண்டின் ஜனநாயகம்.



இங்கு நமக்கு புரிந்து கொள்ள முடியாமல்... இருப்பது இந்த திரைப்படத்தில் தான் முதல்முறையாக முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக காட்டப்பட்டுள்ளதா? இதற்கு முன்னர் வெளிவந்த எண்பதுவீதமான திரைப்படங்களில் வில்லர்கள் பாக்கிஸ்தானுடன் தொடர்புபட்ட முஸ்லீம் பயங்கரவாதிகள் தானே.

தமிழ் சினிமாவை பொருத்தவரை வில்லனை சாராமல் கதாநாயகனை உருவாக்க முடியாது சரியாகச் சொல்வதானாள் 'சாத்தான் இல்லை என்றாள் கடவுள் காளாவதியாகிவிடுவார்' தமிழகத்தை பொருத்தவரை நேரடியான எதிர் தரப்பு ஒன்று இல்லாத காரனத்தாள் தமிழ் திரைப்படங்களை உருவாக்குபவர்கள் அந்த பயங்கர அரக்கனை வடக்கில் இருந்து இறக்குமதி செய்து கொள்கின்றனர் வட இந்தியாவை பொருத்தவரை பாகிஸ்தானிய பயங்கரவாதமே பொது அரக்கன்! அதே போல் மும்பாயையும் டெல்லியையும் குறிவைக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதத்தினதும் பரம எதிரி வடஇந்தியாதான் ஆனாள் தமிழகம் அவர்கள் பார்வையில் ஒரு பொருட்டே அல்ல தமிழகத்தை தாக்குவது என்பது அவர்கள் பட்டியலில் இருக்காது அப்படியானதொரு தாக்குதலை அவர்கள் திட்டமிட்டாள் புவியியல் றீதியாகப் பார்த்தாள் அதிக செலவும் இழப்பையும் தரக்கூடியது அவ்வாறு தாக்குவதன்மூலம் எட்டக்கூடியது மிககுறைவே ஆகவே பாகிஸ்தானிய முஸ்லீம் திவிரவாதம் என்னும் அரக்கன் எமது சினிமாப்படைப்பாளிகள் முட்டாளத்தனமாக இறக்குமதி செய்து கொண்ட வீண்வம்பே!

தமிழர்களின் உண்மையான எதிரிகளான தண்னீர் கொடுக்க மறுக்கும் கர்நாடக மற்றும் கேரள அரசியல்வாதிகள் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் சிங்களவர்கள் இன்று விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் போன்ற இனவாத மற்றும் சாதியவாத அமைப்புகள் மிக முக்கியமாக தமிழக அரசியல்வாதிகள் போன்ற நிஜ அரக்கர்களை தமிழ் படங்களின் வில்லர்களாக காட்டுவதற்கான முதுகெலும்பு தமிழ் சினிமாக்காரர்களில் தொன்னூறு வீதமானவர்களுக்கு இல்லை அவர்களுடைய 'எஸ்கேபிசம்' தான் பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆகவே அந்த அரக்கன் இல்லாமல் உருவாகப்போகும் தமிழ் சினிமாக்களை நினைத்துப்பார்ப்பதற்கே அச்சமாக இருக்கிறது!!!

அது நிற்க இந்த ஜனநாயகத்தின் பின்னாள் மறைந்து கொண்டு மனிதர்களின் அடிப்படை உரிமைகளையே பறிக்கும் மதவாத அமைப்புகளது நிஜப் பயங்கரவாதம் எவ்வளவு தூரம் போகப்போகின்றது என்பது தான் எமது கேள்வி காதலர் தினம் கொண்டாடுபவர்களை சுற்றிவளைப்பது முதல் ஒரு பொழுதுபோக்கு சாதனமான திரைப்படம் வெளியிடுவதை தடுப்பதுவரை அவர்களது காட்டுத்தனம் வளர்ந்து கொண்டேவருகிரது அதுதான் ஜனநாயகமாம்! 'மிக வெளிப்படையாக சொல்ல வேண்டுமாயின் நீங்கள் இல்லாத கடவுளை எதுவிதமான ஆதாரமும் இல்லாமல் இருப்பதாக சொல்லிக்கொண்டு அந்தக்கடவுளின் பெயரால் கொலை செய்வதில் ஆரம்பித்து பூமி உருண்டையில்லை' என சொல்வது வரையான அனைத்து கோமளித்தனங்களை நாம் அனுமதிக்கவில்லையா இந்த ட்றெண்டுக்கு மக்களே முற்றுப்புள்ளி வைக்காவிட்டாள் மற்று மொரு பேரழிவை தடுக்க முடியாது போய்விடும்

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டாவது மதவாதிகளையும் சாதிய வாதிகளையும் நிராகரிக்க ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் இன்னும் சில வருடங்களில் இவர்கள் நம்மை விலங்குகளை விட கீழ்த்தரமாக நடத்துவர் எனபதில் சந்தேகம் இல்லை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக