கோங்கோ நாட்டின் காடுகளுக்குள் வசிக்கும் கொறில்லாக்கள் பற்றிய விவரனத்தை பார்த்துக் கொண்டிருந்த போது குழுக்களாக வாழும் அந்த விலங்குகள் எவ்வாறு தமது தலைவனை தெரிவு செய்கின்றன என்றும் தலைமைத்துவம் வகிக்கும் அந்த குரங்கு எவ்வாறு தனது குழுவின் இருப்பையும் அதன் வளர்ச்சியையும் மையப்படுத்தி செயற்படுக்கின்றது என்பதையும் அதே போல் வேறு ஏதேனும் விலங்குகலாள் அல்லது மனிதர்களாள் தனது குழுவுக்கு அச்சுருத்தல் ஏற்படும் போது குழுவினது அங்கத்தவர்களை பாதுகாக்க தானே உயிரை பணயம் வைக்கின்றனவே தவிர தனது குழுவினது கீழ்மட்ட உருப்பினர்களை ஆபத்தை நோக்கி அனுப்பிவிட்டடு தலைமை பதுங்குவதில்லை
காடு தொடர்பான அறிவு அனுபவம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தலைமையின் முதிர்ச்சி தீர்மாணிக்கப்பட்டாளும் தலைமையின் இருப்பு குழுவின் பெண் உருப்பினர்களிடமே உள்ளதையும் அதே போல் குழுவுக்குள் புதிதாக தலைமையை அடைய விரும்பும் ஏனைய கொரில்லாக்கள் எவ்வாறு முயல்கின்றன என்றும் ஒரு கட்டத்தில் தலைமையை அடைய விரும்பும் குரங்கிற்கும் தலைவனாக இருக்கும் குரங்கிற்கும் இடையிலான நேரடியான சண்டையின் மூலம் ஒன்று கொல்லப்பட மற்றயது தலைமைத்துவத்தை கைப்பற்றும் ஒரு வேளை தலைவனாக இருக்கும் கொரில்லா கொலை செய்யப்பட்டாள் புதிதாக தலைமைக்குவரும் கொரில்லா அந்த குழுவில் உள்ள அனைத்து குட்டிகளையும் கொன்றுவிடும் காரணம் குழுவில் உள்ள அனைத்து குட்டிகளும் தலைவனாக இருந்த கொரில்லாவின் குட்டிகளாகஇருக்கும்
இவை வனவிலங்கினம் ஒன்றின் வாழ்கை முறையினை நீண்டகாளமாக ஆய்வு செய்து தொகுக்கப்பட்ட தகவல்கள்
ஆரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி ஒரு சமூகப்பிராணியான மனிதன் சமூகமாக வாழமுற்படும் போது அரசியல் தோற்றம் பெறுகிரது புராதன கிரேக்கர்களாள் வரைவிலக்கனப்படுத்தப்பட்ட அந்த அரசியல் பல நுற்றாண்டுகiளைக் கடந்து மனிதன் என்னும் விலங்கினது இருப்பை தீர்மாணிக்கும் மாபெரும் சக்தியாக வளர்ந்து நிற்கிரது நூதன சிவில் சமூகத்தின் ஒவn;வாரு செங்கலும் அரசியல் என்ற சீமேந்தாலேயே இணைக்கப்பட்டுள்ளது
கல் யுகத்தில் ஆரம்பித்து பல்வேறு பரிணாமங்களை கடந்து தகவல் யுகத்தில் உலகமே ஒரு கணனிக்குள் சுருங்கிவிட்ட நிலையில் மனித இனம் எனைய விலங்குகளை விட தம்மை வேறுபடுத்திக் கொண்டுவிட்டபோதும் இன்னும் எமக்குள் அந்த கல்யுகத்துக்கு முந்தைய காட்டுத்தனங்கள் எஞ்சியிருக்கின்றன என்பதற்கு மிகச்சிறந்த அண்மைய உதாரணம் தலைவா திரைப்படத்தின் மீதான தடை
ஆமாம் யாரும் தடைவிதிக்க வில்லையே என்று உங்களில் சிலர் சொல்வது புரிகிரது இல்லை உண்மை என்ன வென்றாள் அரசியல் வாதியான ஜெயலலிதா இந்த திரைப்படத்தை தடுக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்கிரார்
முதலில் தலைவா என்பது எந்த வித சினிமா பெறுமதிகளும் இல்லாத மிகமிக கேனைத்தனமாக எடுக்கப்பட்ட அர்த்த சூனியமான ஒரு தரம் இல்லாத மற்றும் ஒரு இந்திய திரைப்படம் எஸ் ஏ சந்திரசேகர் போன்றவர்கள் தாம் ஒரு பெரிய அரசியல் புரட்சிப்படம் எடுத்துவிட்தாக நினைத்துக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை
அது அப்படியிருக்க இந்தியா என்னும் ஜனநாயக நாட்டில் எந்தவித அர்த்தமும் இல்லாத தலைவா திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதானது கொங்கோ வனாந்தர கொரில்லாக்கள் தமது இன குட்டிகளை கொலை செய்வதை ஒத்தது தமது அதிகாரத்துக்கு சவாலாக வரக்கூடும் என்ற அச்சத்தில் எதுவும் செய்யமுடியாத அந்தக்குட்டிகளை கொலை செய்யும் கொரில்லாவும் சரியாக இரண்டு காட்சிகள் தொகுக்கப்படாத தலைவாத்திரைப்படத்தை தடுத்து நிறுத்தும் ஜெயலலிதாவும் உருவத்தில் மட்டுமே வேறுபடுகின்றனர் இருதரப்பினதும் நடவடிக்கைகளும் தமது பரிணாம படிநிலைகளை வெளிப்படுத்துகின்றன
நடிகiயாக இருந்து அரசியலுக்கு வர ஜெயலலிதாவுக்கு என்ன ஜனநாயக உரிமை இருக்கிரதோ அதே ஜனநாயக உரிமை மற்றய அனைத்து குடிமக்களுக்கும் உள்ளது என்பதை அவர் மறந்திருப்பது மட்டுமல்ல மற்றவர்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளை சூழ்ச்சிகரமாக தடுப்பதானது பலநூற்றாண்டுகளாக மனித இனம் அடைந்த வளர்ச்சியைகடந்து மீண்டும் மிருகமாவதை ஒத்தது
திங்கள், 19 ஆகஸ்ட், 2013
சனி, 3 ஆகஸ்ட், 2013
Why this கொலை வெறி விஜய் டிவி?
கருனாநிதி உயிருடன் இருக்க வாலி என்ற கவி மரணித்தது சிரியாவில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமானது அமேரிக்கா மக்களை ஒட்டுக் கேட்பதை வெளியே சொன்ன எட்வட் ஸ்னொட்டன் சீனாவிடமும் ரஸ்யாவிடமும் தஞ்சமடைந்தது பொதுபளசேனா இலங்கையில் முஸ்லீம்களை இனவெரி கொண்டு ஒடுக்க அன்றய தமிழ் அரசியல் தலைவர்கள் என்ன முட்டாள் தனங்களை செய்தார்களோ அதையே ஹகீமும் அதாவுள்ளாவும் எனைய முஸ்லீம் தலைமைகளும் செய்வது என்று பல்வேறு கொடுமைகளை கொஞ்ச நேரம் மறந்துவிட விஜய் டிவியின் சுப்பர்சிங்கரை பார்க்க உட்கார்ந்தாள் மரத்தால் விழுந்தவனை மாடு முட்டிய கதையாய் இந்த ரம்யா!!!
ஒய் திஸ் கொலை வெறி விஜய் டிவி?
தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சி தொகுப்பாலர்களை எதை அடிப்படையாக கொண்டு தெரிவு செய்கிரார்கள என்பது புரியவில்லை அது எதுவாக இருந்தாளும் அது சரிவரவில்லை என்பதை ரசிகர்களது பதிவுகளை இணையத்தில் பார்க்கும் போது தெரிகிரது ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்களும் அவற்றின் முடிவெடுப்பவர்களும் எவ்வளவுக்கு தமது ரசிகர்களை பொருற்படுத்துகிறார்கள் என்பதுவே கேள்வி
றோமர் காலத்தில் மன்னரையும் மக்களையும் மகிழ்விக்க நடத்தப்பட்ட கிளடியேட்டர் சண்டைகளின் நூதன படிநிலையாக உருவெடுத்துள்ள அய்டல் தெரிவு நிகள்ச்சி அமைப்பு தொலைக்காட்சி உலகுக்கு பிரித்தானியரான சய்மன் கவுலினால் அறிமுகம் செய்யப்பட்டது பின்னர் அவர் அதனை அமேரிக்காவின் பொக்ஸ் தொலைகாட்சிக்கு எடுத்துவர அதுவே உளகின் ஒவn;வாரு தொலைக்காட்சி நிறுவனத்தினதும் இன்றி அமையாத நிகள்ச்சி அமைப்பானது தமாக சொந்த நிகள்ச்சி அமைப்புகளை உருவாக்காமல் தொடர்ந்து மேற்கத்தைய நிகள்ச்சிகளை காப்பியடிக்கும் எமது தொலைக்காட்சிகளும் உடனடியாக தாமும் இப்படியான நிகள்ச்சிகளை ஆரம்பித்தாளும் விஜய் டிவியின் சுப்பர் சிங்கர் ஏனைய தொலைக்காட்சிகளின் நிகள்ச்சிகளைவிட வெற்றிகரமானதாகியது அதற்கு பல்வேறு காரணங்களை கூறமுடிந்தாளும் மிக முக்கியமானது நிகள்சியை பார்க்கும் சாதாரனமக்களுக்கு நிகள்ச்சியில் பங்களிப்பவர்கள் தம்மை விட உயர்ந்தவர்கள் என்றோ தம்மைவிட அதிகம் தெரிந்தவர்கள் என்றோ இல்லாமல் தமக்குள் இருந்து வருபவர்கள் தம்மை விட்டு வேறுபட்டு நிற்கும் அந்த மேட்டுக்குடிகளுக்கு சாவாள் விடுவதாகவும் அவர்களது ஈகோவிற்கு எதிராக எழுந்து நிற்கும் தமது உணர்வை பிரதிநிதித்துவம் செய்வதாளும் மக்கள்தம்மை அறியாமலே இந்த நிகள்ச்சியை தமது விருப்புக்குரிய தொரு நிகள்ச்சியாக்கி கொண்டுள்ளனர்
ஆனால் விஜய் டிவியோ தமது நிகள்ச்சின் நிஜமான பிரதிநிதித்துவத்தை புரிந்து கொள்ளாமல் அதன் அடிப்படை யதார்த்தத்துக்கு மாறாக ரசிகர்கள் போட்டியாலர்கள் போன்றவர்களை விட தான் உயர்ந்தவர் மாறுபட்டவர் என்பதை உருதி செய்துகொள்வதையே தனது இலக்காக கொண்டுள்ள றம்யாவை நிகள்சி தொகுப்பாலர் ஆக்கியுள்ளனர் றம்யாவின் நிகள்ச்சி தொகுப்பாற்றலை கூர்ந்து பார்த்தாள் புரிபவை ரம்யாவுக்கு இசையை பற்றி தெரியாது அல்லது தெரிந்ததை சொல்ல தெரியாது
அவருக்கு தனது பார்வையாலர்களுடன் தன்னை தொடர்புபடுத்தி கொள்ளமுடியாதிருக்கிரது
தான் என்ன சொல்கிரேன் என்பது அவருக்கே தெரியாது ஏதோ ஒன்றை சொல்ல ஆரம்பித்து வேறு ஏதாவது கூரி முடிக்கிரார்
றம்யாவுக்கு ஒரு தொகுப்பாலருக்கு இருக்க வேண்டிய (கறிஸ்மா)ஆலுமை இல்லை
இவை எல்லாவற்றையும் விட தன்னால் முடியாது என்பது அவருக்கு தெரியாமல் இருக்கிரது
சன் டிவியை பொருத்தவரை றம்யாக்களை உருவாக்குவதே அவர்கள்தான் ஆனால் விஜய் டிவி உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி ஆள மாத்துங்கப்பா
ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013
13 கேள்விகள்
டிசம்பர் 13 2001-இல் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான விவகாரத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்சல் குரு இவையனைத்தையும் திட்டமிட்டதாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்று தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்படவும் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது சமூக ஆர்வலரும்இஇலக்கிய எழுத்தாளரும் அறிவு ஜீவியுமான அருந்ததி ராய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் ஒரு 13 கேள்விகளை எழுப்பினார். அதன் தமிழ் வடிவம் இதோ:
கேள்வி 1: நாடாளுமன்றம் தாக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே அரசும் போலீசும் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று கூறிவந்துள்ளது. டிசம்பர் 12இ2001-இல் பிரதமர் வாஜ்பாய் கூட்டம் ஒன்றில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார். மறுநாளே தாக்குதல் நடந்தது. 'மேம்பட்ட பாதுகாப்பு பயிற்சி' என்று கூறினார்களே அப்படியிருக்கும்போது வெடிபொருட்கள் நிரம்பிய கார்குண்டு எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது?
கேள்வி 2: தாக்குதல் நடந்து முடிந்து சிலநாட்களிலேயே இந்த தாக்குதலை ஜைஷே மொகமட் மற்றும் லஸ்கர் இ தொய்பா திட்டமிட்டு நடத்தியுள்ளது என்று டெல்லி போலீஸின் சிறப்பு செல் கூறியது. இந்த தாக்குதலை தலைமை ஏற்று நடத்தியவர் மொகமட் என்பவர் என்றும் கூறியது. இவர் ஐ.சி.814 – விமானத்தை 1999ஆம் ஆண்டு கடத்தியவர் என்று கூறபட்டது. பிறகு இது சிபிஐ-யால் மறுக்கப்பட்டது. இவையெல்லாம் கோர்ட்டில் சாட்சி பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. டெல்லி ஸ்பெஷல் செல்லிற்கு என்ன ஆதாரம் இருந்தது?
கேள்வி 3: இந்த அனைத்து தாக்குதலும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த படங்களைக் காட்டவேண்டும் என்று கபில் சிபல் கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையை ராஜ்யசபா துணை சபாநாயகர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். மேலும் இவர் இந்த சம்பவம் குறித்து பல குழப்பங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கூறும்போதுஇ 'நான் பார்த்தபோது காரிலிருந்து 6 பேர் இறங்கினர். 5 பேர்தான் கொல்லப்பட்டனர். சிசிடிவி 6 பேர் இருந்ததைக் காட்டியது' என்றார். தாஸ் முன்ஷி சரி என்றால் போலீஸ் ஏன் 5 பேர்தான் காரில் இருந்ததாக கூறவேண்டும்? யார் அந்த 6வது நபர்? அவர் எங்கே இப்போது? சிசிடிவி படங்களை அரசு தரப்பு சாட்சியமாக ஏன் கோர்ட்டில் போட்டுக் காட்டவில்லை? ஏன் அது பொதுமக்கள் பார்வைக்கு விடப்படவில்லை?
கேள்வி 4: இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது நாடாளுமன்றம் ஏன் ஒத்தி வைக்கப்பட்டது?
கேள்வி 5 : டிசம்பர் 13க்கு பிறகு சில நாட்கள் கழித்து பாகிஸ்தானின் தொடர்பிருப்பதாக சுமார் 5 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பினர். துணைக்கண்டம் அணு ஆயுதப் போருக்கு தயாரானது போல்தான் இருந்தது. அப்சல் குருவை சித்ரவதை செய்து வாங்கப்பட்ட வாக்குமூலம் தவிர முரண்பட முடியாத சாட்சியம் என்ன இருந்தது?
கேள்வி 6: டிசம்பர் 13இ நாடாளுமன்ற தாக்குதலுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே எல்லையில் ராணுவத்தினரை குவிக்கும் திட்டம் நடந்தேறியது என்பது உண்மைதானா?
கேள்வி 7 : சுமார் 1 ஆண்டு எல்லையில் இந்த ராணுவத்தினரின் இருப்புக்கு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? சரியாக கையாளத்தெரியாது வெடித்த கண்ணி வெடிகளினால் எவ்வளவு ராணுவத்தினர்இ பொது ஜனங்கள் உயிரிழந்தனர்? கிராமங்கள் வழியாக லாரிகளும்இ ராணுவத்தினரும் ரோந்தில் ஈடுபட்டதால் எவ்வளவு விவசாயிகள் தங்களது வீடுகளையும் விளை நிலங்களையும் இழந்தனர்? அவர்களது நிலங்களில் கண்ணி வெடிகள் வைக்கப்பட்டதா இல்லையா?
கேள்வி 8: எந்த ஒரு கிரிமினல் குற்ற விசாரணையிலும் ஒருவர் எப்படி குற்றவாளி என்று கண்டுபிடித்தோம் என்பதை போலீஸ் கோர்ட்டிற்கு விளக்குவது அவசியம். எப்படி மொகமது அப்சல் குருவை போலீஸ் பிடித்தது? ஸ்பெஷல் செல் கூறியது கிலானி மூலம் அப்சலைப் பிடித்தோம் என்று. ஆனால் அப்சல் குருவை பிடிக்குமாறு ஜம்மு காஷ்மீர் போலீசுக்கு செய்தி அனுப்பப்பட்டது கிலானியை கைது செய்வதற்கு முன்பே! எப்படி ஸ்பெஷல் செல் அப்சல் குருவை இதில் குற்றவாளியாக சேர்த்தது?
கேள்வி 9 : அப்சல் குரு சரணடைந்த தீவிரவாதி. இவர் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினருடன் தொடர்பில் இருந்துள்ளார்இ குறிப்பாக சிறப்பு அதிரடிப்படையினருடன் இவர் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளார் என்பதை கோர்ட்டுகளே ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர்களது கண்காணிப்பின் கீழ் இருந்த அப்சல் குரு எப்படி இவ்வளவு பெரிய சதித் திட்டத்தை தீட்டினார்?
கேள்வி 10: சிறப்பு அதிரடி படையின் சித்ரவதைக்கூடத்தில் சிக்கியஇ அவர்களுடன் அடிக்கடி தொடர்புடையஇ அவர்களது கண்காணிப்பின் கீழ் உள்ள அப்சல் குருவை வைத்து லஷ்யர் இ தொய்பாஇ ஜைஷீ அமைப்புகள் தாக்குதலை திட்டமிட்டிருக்க முடியுமா?
கேள்வி 11: அப்சல் குரு கோர்ட்டில் கூறும்போதுஇ அப்சல் குருவை மொகமட் என்பவருக்கு அறிமுகம் செய்தவர் டாரிக் அவர்தான் மொகமடை டெல்லிக்கு அழைத்து செல்லக் கூறினார் என்றார். தாரிக் அதிரடிப்படையில் வேலை செய்பவர். போலீஸ் குற்றப்பத்திரிக்கையில் தாரிக் இருக்கிறார். ஆனால் அவர் எங்கே?
கேள்வி 12: டிசம்பர் 19இ 2001-இல் தானே போலீஸ் கமிஷனர் எஸ்.எம். ஷங்கரிஇ நாடாளுமன்ற தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மொகமது யாசின் படே மொகமட் என்றும்இ இவர் லஸ்கரைச் சேர்ந்தவர் என்றும்இ அவர் 2000 ஆம் ஆண்டே மும்பையில் கைது செய்யப்பட்டார் என்றும் இவரை உடனடியாக ஜம்மு போலீசிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார். இவர் கூறுவது உண்மையெனில் ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவலில் இருந்த ஒருவர் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டுள்ளாரா? இது தவறு மொகமது யாசின் எங்கே?
கேள்வி 13: கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் யார் யார்? ஏன் இன்று வரை நமக்கு அது பற்றி கூறப்படவில்லை?
திங்கள், 4 பிப்ரவரி, 2013
சமர்
நுதன உலகின் தொழில்நுற்ப மாற்றங்களின் ஒர் அம்சமாக தற்கலத்தில் கெமரா கண்கானிப்பு என்பது மேற்கு உலக நாட்டவரது இயல்பு வாழ்க்கையில் ஒரு பகுதியாகவிட்டது 9-11 தாக்குதலுக்கு பின் நியுயார்க் லன்டன் பாரிஸ் போன்ற நகரங்கள் 24 மணி நேர கெமரா கண்கானிப்பின் கீழ் இருப்பதை தமது தனிநபர் உரிமைகள் மீதான வரம்பு மீறலாக பலரும் கருதினாலும் 2001 ம் ஆண்டு லண்டனில் அல் கொய்தா தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையை முறியடித்ததில் இந்த கெமரா கண்கானிப்பிற்கு முக்கிய பங்கிருந்தது
சமகால சமூக கலாச்சார அரசியல் மாற்றங்களை உடனடியாகவே தமது படைப்புகளுக்குள் கொண்டு வந்து விடும் மேற்கத்தைய சினிமாக்காரர்கள் இந்த கெமரா கண்கானிப்பினை மையப்படுத்தி பல திரைப்படங்களை உருவாக்கினர் இவற்றில் முக்கியமாக டென்சில் வாசிங்டன் நடித்த டெஜாவு ஜிம் கெரி நடித்த ட்ரூமன் ஷோ போன்ற திரைப்படங்களை குறிப்பிடலாம் அத்தோடு இந்த 24 மணி நேர கண்கானிப்பு என்பதை அடிப்படையாக கொண்டு தொலைக்காட்சிகள் றியாலிட்டி சோக்களையும் தயாரிக்க ஆரம்பித்தனர் முக்கியமாக சீபிஎஸ் தொலைக் காட்சியின் பிக்பிறதர் செவைய்வர் மற்றும் அமேய்சிங் ரேஸ் போன்ற றியாலிட்டி சோக்கள் இந்த 24 மணி நேர கணகானிப்பை அடிப்படையாக கொண்டு விருத்தி செய்யப்ப்டுள்ள போட்டி நிகள்ச்சிகலாகும் இவை கண்கானிப்பின் அடுத்தகட்டமாக தமக்கு தேவையான நாடகத்தன்மையை உருவாக்க இயல்பான நிலையில் உள்ள தமது களத்தை இயல்பற்றதாக மற்றி நிகழ்ச்சியில் பங்களிப்பவர்களை மனோவியல் றீதியாகவும் பௌதீக றிதியாகவும் தொடர்ந்து அழுத்தத்துக்கு உள்ளாக்குவதன் மூலம் அவர்கள் தமது இயல்பு நிலையை இழந்து வரம்பு மீறி போகசெய்வது போட்டியின் வெற்றிக்காக அனைத்து விதமான மணித விழுமியங்களையும் இழக்க செய்வது போன்ற உத்திகளின் மூலம் தொலைக்காட்சிப் பார்வையாளர்களது உள்ளுக்குள் இருக்கும் அந்த பரிணாம வளர்ச்சியடையாத குகை மனிதனை மகிழ்விப்பதுதான் இப்படியான நிகழ்ச்சிகளது நோக்கம் அது வியாபார றீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன
இந்த 24 மணி நேர கண்கானிப்பு தொலைகாட்சி றியாலிட்டி சோக்கள் ஆகிய இரண்டையும் மையப்படுத்தி எதிர்கால உலகை களமாக கொண்டு எழுதப்பட்டுள்ள ஜப்பானிய கதையான ஹங்கர் கேம்ஸை மையப்படுத்தி கடந்த வருடம் ஹங்கர் கேம்ஸ் என்ற திரைப்படம் உருவானது மிக குரைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பாராவிதமாக பெரும் வெற்றி பெற்றது
இந்த ஹங்கர் கேம்ஸ் திரைப்படத்தை பாத்துவிட்டு விஷால் திரிஷா நடிக்க சமர் என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர் தொழில்நுட்பறீதியாக எந்தவித ஆய்வும் செய்யப்படாமல் ஏன் என்று விளங்காத காட்சிகள் தொடர் ஒன்றை வெறும் விஷாலினது அக்ஷன் மற்றும் திரிஷாவின் கிளமர் ஆகியவற்றை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட திரைப்படம். தகவல் தொழில்நுற்பம் வழர்ச்சியடைந்துள்ள இந்தக்காளத்தில் பார்வையாலர்களை இவ்வளவு குறைத்து மதிப்பிடுவது இயக்குனரது தவறே கதை தெரிவு திரைப்பட ரசிகர்களது அறிவுக்கூர்மையை புரிந்து கொள்ளாதது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்வதானது விஷாலை வெகுவிரைவில் மற்ற மொரு சிபிராஜ் அருன் விஜய் போன்ற காளாவதியான வாரிசு நடிகராக்கிவிடும் ஆகவே விஷல் உசார் ப்லீஸ் இப்படியான திரைப்படங்கள் எடுக்க திட்டமிடுபவர்கள் கொஞ்சம் ஆய்வு செய்யவும் ஹங்கர் கேம்சின் வெற்றிக்கான காரணம் புத்தகமாக வெளிவந்த இந்தக்கதை டீனேஜ்கள் மத்தியில் வெகு பிரபலம் அடைந்திருந்தது அதுவே திரைப்படம் வெளிவந்ததும் எதிர் பாராத வெற்றியை கொடுத்தது இது போன்ற கதை ஒன்றை நமது சமுகத்துக்காக எடுக்கும் போது நம்பகத்தன்மையை உருவாக்க செய்ய வேண்டிய லாஜிக்குள்ள திரைக்கதையை உருவாக்கவும். நாயகன் ஏன் தொடாந்து பேங்கொக்கை விட்டு இந்தியா போகாமல் இருக்கிரார் என்பதில் தொடங்கி அடுத்தடுத்து நடக்கும் ஒவ்வொரு திருப்பத்தின் போதும் திரிஷாவிடம் ஒடிப்போவதைத்தவிர கொஞ்சமும் பொது அறிவை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற காடசிகள் தொடர்ச்சியாக வருவது ரசிகர்களை கேலி செய்வதாக இருக்கிரது மொத்தத்தில் சமர் உப்பிலாத சாம்பார்
ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013
முகமது அலியும் கமல் ஹாசனும் ஐ வேவேயும் !!!
1967ம் ஆண்டு அதிபார பிரிவு குத்து சண்டை போட்டிகளில் உலக சம்பியன் ஆன முகமது அலி அவர் பிறந்த நாடான அமேரிக்க சட்டததின்படி கட்டாய இறாணுவ சேவையில் ஈடுபட அழைக்கப்ப்டார்.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக உலக சம்பியன் பட்டத்தை வென்றிருந்த அலி அன்றய திகதியில் உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரனாக இருந்தார் அமேரிக்க கறுப்பர் இனத்வரான அலியின் இயற் பெயர் கசியஸ் கிளே !
அக்காலத்தில் கறுப்பினத்தவரது விடுதலை போராட்டத்தின் ஒரு முகமாக "ஹிலாஜி முகமது" " மல்கம் X" போன்றவர்களது தலைமையில் இயங்கிய அமேரிக்க கறுப்பு முஸ்லீம்கள் அமைப்பில் இணைந்து இஸ்லாமிய மதத்தை தளுவினார் "மாட்டின் லூத்தர்கிங்" தலைமையில் நடந்து வந்த கிறிஸ்த்துவ கறுப்பர்களுடன் ஒப்பிடுகையில் "மல்கம் X" "முகமது அலி" போன்றவர்கள் மிகவும் வேகம் உள்ளவர்களாகவும் அதிகம் கவணிக்கப் படுபவர்ளாகவும் இருந்தனர் ஆட்சியில் இருந்த அரசுக்கும் வெள்ளையருக்கும் அவர்களது பேச்சுக்கள், நடவடிக்கைகள், மூலம் மிகக்கடுமையான அழுத்தத்தை கொடுத்துவந்தனர்! "அமேரிக்க மத்திய உளவு எஜன்சி" உற்பட அனைத்து வகையான அரச இயந்திரங்களும் இவர்களை அடக்க அல்லது முடிவாக அகற்றிவிட முடக்கி விடப்பட்டிருந்தன
இதே காலத்தில் அமெரிக்கா வியட்நாமில் ஹோ சி மிங் தலைமையிலான வியட்கொம்களுக்கு எதிரான முலுமையான போரில் ஈடுபட்டிருந்தது, அப்போது தான் உள்நாட்டில் தமக்கிருந்த ஒரு தலைவலியை நீக்க போரை பயன்படுத்திவிட தீர்மானித்தனர்!
முகமது அலியை தனது நாட்டுக்காக போராட வருமாறு அழைக்கபட்டது அப்போது தனது இருபதுகளில் இருந்த உலகசம்பியனான அலிக்கு இழப்பதற்கு நிறையவே இருந்தது அனைவரதும் கவணம் அவர்மீது திரும்பியிருந்த நேரம் அலி இறாணுவ சேவையில் இணையப்போவதில்லை என்ற கதை பரவியிருந்த நிலையில் ஆட் சேர்ப்புக்காக அழைக்கப்பட்ட தினத்தில் டெக்ஸ்டாஸ் ஹஸ்டன் நகர தபாலக கட்டத்திற்கு வந்த ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் உள்லே சென்ற அவர் மூடிய கதவுகளுக்கு பின்னால் தனது பதிலை தெரிவித்து விட்டு வெளியே வரும் போது ஊடகவியலாலர்கள் கேள்வி எழுப்பினர் பிறந்த நாட்டுக்காக போருக்கு போக ஏன் மறுக்கிறீகள்? " நான் சாக வேண்டுமானால் இங்கு சாவேன் போராட வேண்டுமானால் இங்கு போராடுவேன் என் எதிரிகள் நீங்கள் வெள்ளையர்கள் எங்கோ ஒரு நாட்டில் இருக்கும் வியட்நாமியனோ சீனாக்காரனோ அல்லது தோல் நிறம் வெள்ளையில்லாத மனிதர்களை கொலை செயவதற்கு போக மறுக்கிறேன் எங்கோ ஒரு நாட்டில் உள்ள ஏழை மக்களை வசதியுடைய பலம்வாய்ந்த அமேரிக்காவுக்காக கொலை செய்ய நான் போகப்போவதில்லை அவர்கள் என் மூதாதையரை அடிமை படுத்தவோ மிருகம்போல் நடத்தவோ இல்லை அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்யப் போக மறுக்கிறேன் அதற்காக என்னை சிறையிலிடுவதானால் இடட்டும்!"
அலியின் இந்த முடிவை அடுத்து அவர் வென்ற உலக சம்பியன் பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அவரது குத்து சன்டை போட்டிகளுக்கான அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டது அலி கைது செய்யப்பட்டார் குத்து சண்டை வலயத்தினுல் எவராளும் விழுத்த முடியாதிருந்த அந்த வீரனை! அவரது விளையாட்டுத்திறனின் உச்ச கட்டத்தில் இருந்த போது அரசியல் சூழ்ச்சிகளால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு களத்தைவிட்டு அகற்றினர் . இந்த நிலையில் அலி சொன்னார் நான் இழப்பவை அதிகம்தான்! ஆனால் என் முடிவு இறுதியானது அதன் நியாயங்களை வரலாறு சொல்லும்!!!
ஐ வேவே 2008 ம் ஆண்டு மாவோகண்ட மக்கள் சீனா நடத்திய ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்ற அரங்கத்தை நிர்மானிப்பதில் பெரும் பங்கு வகித்தவர் கட்டிடக் கலைஞ்ஞர் மெய்யியலாலர் சமூக ஆர்வலர் இப்படி பல பெயர்களை சொல்லிக்கொண்டே போகலாம் அல்லது ஓரே வார்த்தையில் கலைஞ்ஞன் என்றும் சொல்லலாம்,
தற்கால சீனாவைப்பற்றி சொல்வதானால் அமேரிக்கா உலகிற்கு நடந்து விட்ட சாபம் என்றாள் சீனாவோ நடக்கவிருக்கும் பயங்கரம்! மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகார முறை ஒன்றின் கீழ் மனிதத்துவம் சமுதாய பொறுப்புகள் எதையுமே கணக்கில் எடுக்காமல் நவீன உலகின் முதலாம் இலக்க முதலாலியாய் வருவதற்காக அரக்கத்தனமாக இயங்கி கொண்டிருக்கும் இயந்திரம் அந்த அமைப்பிற்குள் ஒரு அணும் பெண்னும் கலவிகொணடு பிள்ளை பெறுவது முதல் ஒரு கலைப்படைப்பை வெளியிடுவது வரை ஆண்டு கொணடிருக்கும் கமியுனிஸ்ட் கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் செய்யப்பட வேணடும்!
சீனாவின் சிங்சாங் பிராந்தியத்தில் இடம் பெற்ற நில நடுக்கத்தின் பின்னரான சீன அரசின் ஊலல்கள் மூடி மறைப்புக்கள் முக்கியமாக "சிங்சாங்கின் டுபூ ஸஹின்" பாடசாலை அழிந்த விவகாரம் போன்ற சீன அரசு உலகத்திடமிருந்து மறைக்கும் விடயங்களை வெளிகொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவு சிறையில் அடைக்கப்பட்டார் அவருக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டு வரி ஏய்ப்பு சில காலம் சிறையில் இருந்த ஐ வேவே பின்னர் ஏற்பட்ட சர்வதேச எதிர்ப்புகளை தவிர்க்கும் வகையில் விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் ஆனால் சீன அரசாங்கத்தினது எந்த விதமான அழுத்தங்களுக்கு முன்னாளும் அவரது கலைப்படைப்புகள் சிரம் தாழ்த்தவில்லை!
கமல் ஹசன் தமிழ் சினிமாவின் உலக நாயகன்! தமிழ் சினிமாவிற்குள் நவீன தொலில்நுற்பத்தை கொண்டுவந்ததில் பெரும் பங்களிப்பு செய்தவர், சிறுவர்களாய் இருந்த நாம் இளைஞ்ஞர்களானபோது எமக்குள் இருந்த சமுதாய கோபத்தை அர்த்தப்படுத்தியது அவர் நடித்த சத்தியா, அந்த வேகம் தணிந்து ஆனாள் ஏக்கம் தீராமல் இருந்த போது பல யதார்த்தங்களை சொன்னது கமல் நடித்த அன்பே சிவம்!
கமலது விஸ்வரூபம் தொடர்பில் நிறையவே பேசியாகிவிட்டது அந்த திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு காரணம் அரசியல் என்பது தெளிவு, அது ஜெயலலிதாவினுடையதா? அல்லது தனியே மதவாத அமைப்புகளினது அரசியலா? அல்லது வேறு ஏதாவது ஒரு தரப்பா ?என்பதை வரலாறு எமக்கு சொல்லும்
ஆனால் அதுவல்ல இப்போது எமக்கிருக்கும் வருத்தம் சமரசம் என்ற பெயரில் கமல் தமிழ் சினிமாவின் சவப்பெட்டியின் முதல் ஆணியை அடித்திருக்கிறார் என்பதுதான் !!!
ஒரு தணிக்கை குழு வைக்கப்பட்டு அதில் உள்ளவர்கள் குறிப்பிட்ட திரைப்படம் திரையிடப்பட தகுதியானது தான் என சான்றிதல் அளித்ததன் பின்னர், ஊருக்குள் இருக்கும் அனைத்து விதமான (சங்கங்கள்) (அரசியல் கட்சிகள்) (சாதியஅமைப்புகள்) என "ஆட்டொ காரர் சங்கம்முதல் தலிபான் தீவிரவாதிகள்வரை" அனைவரதும் ஆசிர்வாதத்துடன் தான் இனி வரும் ஒவ்வரு திரைப்படமும் வெளியிடப்பட வேணடியிருக்கும்! திரைப்படத்தின் பெயரில் ஆரம்பித்து ஒவ்வரு காட்சி, கதை வசனம் முதல் நாயகியின் இடை, தொடை வரை ஒவ்வொன்றுக்கும் எதிராக வழக்கு தொடரவும் அரசிடம் மனு கொடுக்கவும் போதுமானளவு "ஜந்துக்களும்" அவற்றை நியாயப்படுத்த சோ போன்ற அதி புத்திசாலிகளும் இருக்கின்றனர் ஆகவே இனி தமிழ் சினிமா எடுக்கப்போகும் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது என்ன வென்றாள் ((ஸாரி சார் ஆப்பு ஏற்கனவே வைக்கப்பட்டு விட்டது போய் அமர்வது உங்கள் விருப்பம்))
முகமது அலிக்கும் ஐ வேவேயுக்கும் இருந்த முதுகெலும்பு உலகநாயகனுக்கு இல்லாமல் போனது தமிழர்களது துர்பாக்கியமே!
பிற்குறிப்பு (கலைஞ்ஞர்கள் சமரசம் செய்து கொள்வதில்லை கம்பனும் பாரதியும் கன்னதாசனும் சமரசம் செய்து கொண்டிருந்தாள் எமது இலக்கியங்கள் அன்றே இறந்திருக்கும்)
சனி, 2 பிப்ரவரி, 2013
கும்கி வெற்றியும் தோல்வியும்
இயக்குனர் பிரபு சாலமன் தமிழ் சினிமா மரபுகளை ஒதுக்கிவிட்டு நமக்கு பறீட்சியம் இல்லாத களத்தில் வழக்கமான வில்லனும் கதாநாயகனும் சண்டை போடும் காட்சிகளோ எந்த வித லாஜிக்கும் இல்லாத காட்சிகளோ இல்லாமல் கும்கி படத்தை உருவாக்கியிருக்கிரார்.
மலை வாசிகள், அவர்களது வாழ்வியல் யதார்த்தங்கள், ஏன் யானைகள் போன்ற அனைத்து விதமான கதையம்சங்களிலும் அவர் செய்திருக்கும் ஆய்வின் சிறப்பை காணமுடிகிரது! காங்கிறீட் வனாந்தரங்களுக்கு அப்பால் பச்சை பசேலாகத் தெரியும் கதைக்களம் மனதுக்கு இதமாக இருக்கிரது இயற்கையையும் கிராமததையும் இப்படியும் காட்டலாம் என்பதை சொல்கிரது ஒளிப்பதிவு, டி இமானின் இசை ஆஹா ஒஹோ என்னும் அளவுக்கு இல்லை என்றாளும் கதையின் ஒட்டத்தோடு ஒன்றுகிரது.
சிவாஜி குடும்பத்தின் வாரிசு படமாக கும்கியை பார்க்க போனால் எமக்கு கிடைப்பது ஏமாற்றம் தான்! நாயகன் விக்ரம் பிரபு படம் முலுதும் எந்தவித முகபாவமும் இல்லாமல் இருப்பது ஒரு இயக்குனராய் பிரபு சாலமனை தோற்கச்செய்திருக்கிறது இதே பாத்திரத்தில் அவரது முதல் பட நாயகன் விதார்த் நடித்திருந்தால் படத்தின் தரமே வேறாக இருந்திருக்கும் சிவாஜி பிரபு குடும்பத்தின் வாரிசு என்ற பெரும் சுமையை தலைமேல் வைக்கப்பட்டிருக்கும் விக்ரம் பிரபு நிறையவே பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிரது
கதாநாயகனிடம் எதை எல்லாம் கோட்டை விட்டாரோ இயக்குனர் அதையெல்லாம் ஒரு படி மேலாகவே பெற்றுக் கொண்டிருக்கிரார் தம்பி ராமையாவிடம் படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அசத்தியிருக்கிரார் மனிதர் படத்தின் ஒவ்வரு காட்சியும் தொய்வி;ன்றி நகர்வதற்கான காரணம் தம்பி ராமையாவின் கதாபாத்திரமே! நமது இயக்குனர்கள் அவரை சரியாக பயன்படுத்தினாள் தமிழ் சினிமாவின் றாபின் வில்லியம்ஸ் அவர்தான்
மொத்தத்தில் கதையிலும் களத் தெரிவிலும் வென்ற இயக்குனர் பிரபு சாலமன் நாயகனை இயக்குவதில் தோற்றிருக்கிரார்
வெள்ளி, 1 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








